Wednesday, February 16, 2011

sivagathi


அப்பர் சுட்டும் அருள் உழவு
                                                        
சிவகதி எய்தத் தவநெறி நின்று தொண்டாற்றிய அருளாளர் அப்பரடிகள், உழவாரப்படை ஏந்தித் திருத்தொண்டு புரிந்த உயர்ந்த சீலர். அவர் சிவகதியாகிய விளைவினை, அனைத்து உயிர்களும் எய்தச் செய்யவேண்டிய ஞான உழவினைப் பின்வரும் பாடலில் இனிது புகட்டுகிறார்.

மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி இட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மாறே! (திருநாவுக்கரசர் தேவாரம் - 4 - 76:2)

பற்றற்றான் பற்றினைப் பற்றும் பற்றாகிய விருப்பம் என்பது இப்பாடலில் வித்தாகிறது.

வெட்ட வெட்ட முளைக்கும் களையாகிய பொய்ம்மையை முற்ற வாங்கி, பொறை என்னும் நீர் பாய்ச்சுதலோடு, தம்மையும் நோக்கிக் கண்டு, தகவெனும் வேலி இட்டுக் காத்தல் என்பது இன்றியமையாதது.


தம்நிலை கண்டு அதற்குத் தகுதியான நிலையில் வேலி அமைத்துக் காத்துச் செம்மையுள் நிற்பவர் நிச்சயம், சிவகதியை விளைவாகப் பெறுவார் என்கிறார் அப்பர்

மெய்ம்மையாம் (1) உழவைச் செய்து

doing the ploughing which is truth.

விருப்பு எனும் வித்தைவித்தி

sowing the seeds of love.

பொய்ம்மையாம் களையை வாங்கி

removing the weeds of false-hood.

பொறை எனும் நீரைப் பாய்ச்சி

irrigating the field with water of forbearance.

தம்மையும் நோக்கிக் கண்டு

realising self by turning the wisdom internally and seeing god.

தகவு எனும் வேலி இட்டு

constructing the fence of impartiality to protect the crop.

செம்மையுள் நிற்பராகில்

if they are steady in the right conduct.

சிவகதிவிளையும் (அன்று, ஏ)

eternal bliss will be produced.


om nama sivaayaaa om nama sivaayaaa
om nama sivaayaaa

No comments:

Post a Comment