Wednesday, February 27, 2013



கோரக்கர்- மந்திர ஜெபம்


கோரக்கர் தனது "ரவிமேகலைஎன்னும் நூலில்
 இந்த முறையினை விளக்கி இருக்கிறார்
பூசித்திடு மூலமுதல் மந்திரத்தைப் போற்றி
புகன்றிடுவேன் லெட்சமுரு ஆவர்த்தி கொள்போற்றி
காப்பதற்கு ஆயுள்விருத்தி மூலமந்திர மோது
காலனற்றுப் போய்விடுவா னில்லைநாளுந் தீது
ஏர்ப்பதற்காய் இன்னமுண்டு இயம்பிடுவேன் மீது
இன்பமுடன் மந்திர செபங்கள் செய் தப்பாது
பூர்த்திசெய் துகந்துகண்டு கொள்வாய் மூலத்தாது
புன்மலத்தில் ஆசையற்றுப் போய்விடும்பொய் சூது
நேர்த்தியாப்பின் அபமிருந்து மூலஞ்சொல்நீ சாது
நிலைத்திடுமுன் காயமாவி இல்லையேமன வாது
                                  .-கோரக்கர்



மூலமந்திரம்
"ரெக்ஷிகியே நமோ நமா பார்வதி
நீபஞ்சாக்ஷிரி ரிங் ரிங் குர
தக்ஷணி நகுலக் ஸ்ரீரீங்
ககலுக் டங் லுங்
அக்ஷரி ஹரிபிரம விஷ்ணு
ஆத்ம ஸம்ரெக்ஷ ஆதார பீஜ
கட கட மிருத் விநாசக
இட் இட் இமாம் இமாஞ்ச
இக் ருக்மம துயிருள் நீடித்தே நமஹா."
(
ஒரு லட்சம் முறை
)

ஆயுள் விருத்தியும்உடலுக்கு பாதுகாப்பும் கிடைக்க தான் 
அருளும் மூல மந்திரத்தை ஒரு லட்சம் முறை செபித்தால்போதும் என்கிறார்.
 இப்படி செய்வதன் மூலம் எமன் பயம் இனி இல்லாது போகும் என்றும் கூறுகிறார்.
மந்திரங்களை செபிப்பது ஒருபோதும் தவறாகாதுஇந்த உண்மையை செபத்தை 
பூர்த்தி செய்வதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம் என்கிறார்
இந்த மந்திரத்தைசெபம் செய்வதால் மனதின் ஆசைகள்பொய் சூது நீங்குமாம்.

No comments:

Post a Comment